டாஸ்மாக்கை மூடுறது எல்லாம் சரியா வராது!! வாய்க்கொடுத்து மாட்டிக்கிட்ட உலக நாயகன்..

Kamal Haasan Gossip Today TASMAC Kallakurichi
By Edward Jun 23, 2024 07:30 PM GMT
Edward

Edward

Report

தமிழகத்தில் தற்போது வரை அதிகமாக பேசப்பட்டு வரும் செய்தி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விஷயம் தான். கள்ளச்சாராயத்தை அருந்திய 100க்கும் மேற்பட்டவர்களில் 55க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர்.

இறந்தவர்களுக்கு அரசு 10 லட்சம் நிவாரணம் தொகையை கொடுத்ததை அடுத்து, அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.

டாஸ்மாக்கை மூடுறது எல்லாம் சரியா வராது!! வாய்க்கொடுத்து மாட்டிக்கிட்ட உலக நாயகன்.. | Kamal Haasan Talk About Drinkers Tasmac Close

சமீபத்தில் நடிகர் விஜய் சென்றதை அடுத்து இன்று உலகநாயகன் கமல் ஹாசன் கள்ளக்குறிச்சிக்கு சென்று மரணமடைந்தவர்களின் குடும்பம் மற்றும் சிகிச்சை பெற்றுவருபவர்கள் பார்த்து வந்தார்.

பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய கமல், மதுக்கடைகளை உடனே மூடினால் மட்டும் எல்லாம் முடிந்துவிடும் என்பது தவறான கருத்து என்றும் சாலை விபத்து நடைபெறும் என்பதால் போக்குவரத்தை நிறுத்த முடியாது என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், டாஸ்மாக் அருகிலேயே விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும். குடிக்காதே என்று சொல்ல முடியாது, அளவோடு குடி என்று வேண்டுமானால் சொல்லலாம் என்று பேசியிருக்கிறார். இதற்கு பலர் கண்டித்தபடி கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.