பத்தாவது ஃபெயில்!! கமல், சரிகா பற்றிய உண்மையை உடைத்த மகள் அக்ஷரா ஹாசன்..
உலக நாயகன் கமல் ஹாசன் மகளாக தமிழ் சினிமாவில் அஜித் குமார் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் நடாஷா என்ற ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார் நடிகை அக்ஷரா ஹாசன். இந்தியில் அபிதாப் பச்சன், தனுஷ் நடிப்பில் உருவாகி வெளியான சமிதாப் படத்தில் நடித்து சினிமாத்துறையில் காலெடி எடுத்து வைத்தார். கடாரம் கொண்டான், அச்சம் மடம் நாணம் பயிற்பு போன்ற படங்களில் சைட் ரோல் நடிகையாக நடித்திருப்பார். ஃபிங்கர் டிப் என்ற வெப் தொடரில் நடித்தப்பின் தற்போது அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அக்ஷரா ஹாசன், மும்பையில் அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பெற்றோர்கள் பற்றியும் அக்கா ஸ்ருதி ஹாசன் பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். சினிமாவிற்கு வரும் முன் எனக்கு இந்தத்துறை எப்படி இருக்கும் என்று தெரியவந்தது. வீட்டில் உள்ளவர்கள் அதற்கான காரியத்தை கொடுத்து இருந்தார்கள். நான் வந்தால் என்னை என் பெற்றோருடன் வைத்து ஒப்புடுவார்கள் என்றும் தெரியும். ஆனால் எனக்கு ஒரு இடமும் அவர்கள் தான் கொடுத்திருக்கிறார்கள். அதேநேரம், என் தனுத்துவத்தை உருவாக்கிக்கொள்ள அனுமதியும் கொடுத்தார்கள்.
இதற்கு என் பெற்றோருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். சிறு வயதில் எங்கள் விட்டில் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. நீ நடிகையாக வேண்டும், டாக்டராக வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. சிறு வயதில் டீச்சர், நீ வளர்ந்ததும் என்ன ஆக ஆசைப்படுகிறார் என்று கேட்டதற்கு ஒரு டான்ஸ் மாஸ்டர் அல்லது ஃபுட்பால் பிளேயர் ஆவேன் என்று கூறினேன். என் மனதில் அது இருந்தது. நடிகையாகாமல் இருந்திருந்தால் ஃபுட்பால் பிளேயர் ஆகியிருப்பேன். நான் காலேஜ் போகமாட்டேன், 18 வயதுக்கு பின் வேலைக்கு போய்விடுவேன் என்று அப்பாவிடம் நான் சொன்னேன்.
அதற்கு அப்பா, ஏன் அப்படி சொல்கிறாய் என்றதற்கு அப்படித்தான் தோன்றுகிறது என்றேன். ஹைஸ்கூல் ட்ராப் அவுட் ஆகிவிட்டு பத்தாவது ஃபெயில் ஆகிவிட்டேன், திரும்ப எழுதினேன். அதிலும் ஃபெயில் ஆகிவிட்டேன். சிலருக்கு படிப்பது பிடிக்காது என்பதில் தப்பு இல்லை. டான்ஸ் கிளாஸ் போய் கொண்டிருந்த போது கால் உடைந்து அறுவை சிகிச்சை செய்து 6 மாதம் ரெஸ்ட்டில் இருந்தேன். அம்மா 4 வயதில் நடிக்க ஆரம்பித்ததால் பள்ளியில் படிக்கவில்லை.
அம்மாவுக்கு ஸ்கூல் என்பது சினிமா இண்டஸ்ட்ரி தான். அதனால் அம்மா என்னை புரிந்து கொண்டார். பின் சம்பாதிக்க ஆர்மபித்து 18 வயதில் இருந்து சொந்தக்காலில் நிற்கிறேன். பெற்றோரிடமும் பணம் கேட்பதில்லை, நாளைக்கு நாம் நம் வாழ்க்கையை பார்த்துக்கொள்ள வேண்டும். சிறு வயதில் இருந்தே அதை புரிந்து கொண்டேன் என்று அக்ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார்.
என் அப்பா அம்மா தனியாகப்பிரியும் போது ஒரு குழந்தையாக என் மனதை அது பாதித்தது. ஏனென்றால் நான் நடிகரின் மகளாக இருக்கலாம், ஆனால் நாங்களும் மனிதர்கள் தானே? மனதை பார்துக்காத்தானே செய்யும். ஹோட்டலுக்கு ஒருமுறை சென்றபோது என் குடும்பத்தை யாரோ கிண்டலடித்தனர்.
அப்படியே நான் அவர் மேல் பாயப்போய்விட்டேன். அக்காதான் என்னை அடக்கி நம் குடும்பத்தின் மானத்தை நாம் தான் காப்பற்ற வேண்டும் அப்படி நடந்து கொள்ளக்கூடாது என்று அறிவுறை கூறினார். நானும் அக்காவும் மும்பையில் தான் இருக்கிறோம்.
சென்னைப்போல் மும்பை கிடையாது. சென்னை வட்ட வடிவம், மும்பை நீளமான நகரம். இரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல கஷ்டம். என்னைவிட அக்கா 40 கிலோ மீட்டர் தள்ளி இருக்கிறார் என்று பகிர்ந்துள்ளார் நடிகை அக்ஷரா ஹாசன்.