அந்த திருமணம் செய்தால் நாசமா போயிடுவ பலஆண்டுகள் உண்மையை உடைத்த நடிகை
பாலிவுட் சினிமாவில் பல படங்களில் ஜோடிகளாக நடித்து ரியல் ஜோடிகளாக வாழ்ந்து வரும் பிரபலங்களில் முக்கியமானவர்கள் கரினா கபூர் மற்றும் சைஃப் அலிகான்.
அந்த வகையில் இந்திய சினிமாவில் மட்டும் அல்லாமல் உலக சினிமாவிலும் பல நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு தற்போது வரை நல்லபடியாக வாழ்ந்து வருகின்றனர்.
அப்படிப்பட்ட ஜோடிகளில் ஒருவர் தான் சைப் அலி கான் மற்றும் கரீனா கபூர் ஜோடி. 2012 ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை இருவருக்குள்ளும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது.
சினிமாவில் உச்சத்தில் இருந்த கரீனா கபூர் சைப் அலிகானை காதலிக்கிறேன் என தன்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் கூறியபோது அவர் மோசமானவர் எனவும், அவரை திருமணம் செய்து கொண்டால் உன் வாழ்க்கையே நாசமாகி விடும் என்று சாபம் விட்டதாகவும் சமீபத்தில் அளித்தப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது இருவரும் தன் இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.