முன்னாள் கணவரா இல்லை காதலரா? பிரபல நடிகையின் காதல் விசயத்தில் சர்ச்சையை கிளப்பிய இயக்குனர்
பாலிவுட் சினிமாவில் பிரபல நிகழ்ச்சியாக கருதப்படுவது காப்பி வித் கரண். இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கி வரும் அந்நிகழ்ச்சியின் 7-வது சீசன் ஓடிடி தளத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
ரன்வீர் சிங் - ஆலியா, ஜான்வி கபூர் - சாராஅலிகான், அக்ஷய்குமார் - சமந்தா, விஜய் தேவரகொண்டா - அனன்யா பாண்டே போன்றவர்களை தொடர்ந்து சமீபத்தில் ஆமிர்கான் - கரீனா கபூர் கான் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் சாகித் கபூர் உங்களின் முன்னாள் கணவரா என்று கேட்டுள்ளார். இதுகுறித்து ஷாக்காகி வாய்ப்பிளந்தபடி இருந்தார் கரீனா கபூர். உடனே கரண் ஜோகர், சாரி அவர் உங்கள் முன்னாள் காதலரா என்று கூறி மழுப்பியுள்ளார்.
சாகித்கபூர் - கரீனா ஏற்கனவே காதலித்து வந்த நிலையில் கரீனா, 2012ல் சைஃப் அலிகானை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சாகித்கபூர் 2016ல் திருமணம் செய்து கொண்டார்.
இப்படி முன்னாள் கணவர் என்று கூறி ஏன் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்று கரண் ஜோகரை திட்டித்தீர்த்து வருகிறார்கள். ஏற்கனவே நயன் தாரா பற்றி கூறியது ரசிகர்கள் கொந்தளித்து திட்டி வருவதுமாக இருந்தது.