திருமணத்திற்கு முன் நடிகையின் பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்த கார்த்தி!! முட்டுக்கட்டை போட்ட தந்தை.. பிரபலம்
இயக்குனர் அமீர் இயக்கத்தில் சிவக்குமார் மகனாக நடிகர் கார்த்தி நடித்து சூப்பர் ஹிட்டான படம் பருத்தி வீரன். இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த நடிகர் கார்த்தி, சமீபத்தில் அவரது 25வது படமான ஜப்பான் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.
இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், கார்த்தி - தமன்னா காதல் விசயம் பற்றி பேசியிருக்கிறார். அதில் சிவக்குமாரின் 2வது மகன் கார்த்தி, சூர்யாவை போல் காதல் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லி வைத்திருக்கிறார்.
அதற்கு ஏற்ப கார்த்தியும் காதலிக்காமல் சிவக்குமார் பார்த்து வைத்த உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இப்படி இருக்க பையா, தோழா படத்தின் போது தமன்னாவுக்கு நூல் விட்டிருக்கிறாராம் கார்த்தி.
தமன்னா பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கும் போது இதனை அறிந்த சிவக்குமார், கார்த்தியை கூப்பிட்டு டேய் உனக்கு வீட்டில் பெண் பார்த்துட்டு இருக்கோம்.
பெண் பார்த்தாச்சு, கொஞ்சம் பொறுமையா இரு, நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று கார்த்தி - தமன்னா காதலுக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறார். அதனால் தமன்னா காதலை கைக்கழுவிட்டு சொந்தக்கார பெண்ணை கல்யாணம் செய்தார் கார்த்தி, என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.