ரோகினிக்கு நடக்கும் வளைகாப்பு.. வருத்தத்தில் இருந்த ரேவதிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை **இரவு 9 மணிக்கு** ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். கடந்த எபிசோடில் ரோகினியின் வளைகாப்பு விழாவுக்கு வந்த ரேவதியை சாமுண்டீஸ்வரி அவமானப்படுத்தி அனுப்பிய நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
வீட்டிற்கு திரும்பிய ரேவதி, "அம்மா இப்படி செய்வார்கள் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை" என வருத்தப்படுகிறாள். அப்போது பரமேஸ்வரி பாட்டியும் கார்த்திக்கும் அவளுக்கு ஆறுதல் கூறுகின்றனர். மேலும், வீடியோ கால் மூலம் வளைகாப்பு நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்வதாக கார்த்திக் கூறினாலும், அதற்கு ரேவதி மறுப்பு தெரிவிக்கிறாள்.

இதையடுத்து கார்த்திக், மயில்வாகனத்திற்கு போன் செய்து ஒரு திட்டத்தை கூறுகிறான். வளைகாப்பு விழா முடிந்ததும் போட்டோ எடுக்க வேண்டும் என்ற காரணத்தைக் கூறி ரோகினியை ஸ்டூடியோவுக்கு அழைத்து வருமாறு சொல்கிறான். சாமுண்டீஸ்வரி, வீட்டிலேயே புகைப்படம் எடுக்கலாம் என கூறினாலும், மயில்வாகனம் ஸ்டூடியோவுக்கு சென்று எடுத்து வரலாம் என்று கூறி ரோகினியை அழைத்துக்கொண்டு கிளம்புகிறார்.
மறுபக்கம், கார்த்திக் தனது புதிய வீட்டில் ரோகினிக்காக வளைகாப்பு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்கிறான். அந்த இடத்திற்கு ரோகினியும் மயில்வாகனமும் வருகிறார்கள். அதன்பிறகு, வருத்தத்துடன் இருக்கும் ரேவதியை கார்த்திக் கீழே அழைத்து வர, அங்கு ரோகினியை பார்த்ததும் ரேவதி மகிழ்ச்சியில் திளைக்கிறாள்.
இதையடுத்து ரோகினிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. ஆனால், ரோகினி மற்றும் மயில்வாகனம் அங்கு வந்திருக்கும் தகவல் யாரோ ஒருவரின் மூலம் சாமுண்டீஸ்வரிக்கு தெரிய வருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சாமுண்டீஸ்வரி நேராக அந்த இடத்திற்கு வந்து சண்டையிடத் தொடங்குகிறாள். கார்த்திக் இந்த ஏற்பாட்டை தான்தான் செய்ததாக கூற முயற்சிக்கும்போது, ரோகினி அவரை தடுத்து நிறுத்தி, "நாங்களே விருப்பப்பட்டுத்தான் இங்கே வந்தோம்" என்று கூறி சாமுண்டீஸ்வரியை சமாதானப்படுத்தி அனுப்புகிறாள்.
இந்நிலையில், இந்த சம்பவங்களுக்குப் பிறகு அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்பதை தெரிந்துகொள்ள கார்த்திகை தீபம் சீரியலை Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.