அட்ஜெஸ்ட்மெண்ட் ரெண்டு பேரின் தனிப்பட்ட விஷயம்!! சர்ச்சை கருத்தை கூறிய நடிகர் சங்க துணைத்தலைவர்...
அட்ஜெஸ்ட்மெண்ட்
மலையாள சினிமாவில் நடிகைகள் அதிகமாக பாலியல் துஷ்பிரயோக பிரச்சனைகளுக்கு ஆளாகுகிறார்கள் என்று ஹெமா கமிஷன் அறிக்கை வெளியிட்டிருந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தது. இதுகுறித்து சமீபத்தில் நடிகை சனம் செட்டி கொந்தளித்து பேசியிருந்தார்.
அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அழைத்தால் அவனை செருப்பால் அடிப்பேன் என்றும் கூறியிருந்தார். தற்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நடிகர் சங்க துணைத்தலைவரும் நடிகருமான நடிகர் கருணாஸ் ஒரு கருத்தினை கூறியிருக்கிறார்.
நடிகர் சங்க துணைத்தலைவர்
அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது சினிமாவில் மட்டும்தான் என்று உங்களால் உறுதியாக சொல்லமுடியுமா? இந்த சமூகத்தில் வேறு எங்கேயும் இல்லையா? அது இரண்டு பேர் சம்மந்தப்பட்ட தனிப்பட்ட விஷயம். யாருடைய விருப்பமும் இல்லாமல் இங்கு எதுவும் நடப்பதில்லை.
நான் வெளியூரில் இருந்ததால் எனக்கு ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து தெரியவில்லை. தெளிவாகத் தெரிந்து கொண்டு வரக்கூடிய காலங்களில் நான் பதில் சொல்கிறேன் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கருணாஸ் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து இப்படியொரு கருத்தினை கூறியிருப்பது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.