அந்த காரணத்தால் மருமகளுக்கு எங்கள் குடும்பம் செட் ஆகல.. தனுஷின் தந்தை ஓபன் டாக்
நடிகர் தனுஷ், கடந்த 2004 -ம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். '
சுமூகமாக சென்று கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை 2022 -ம் ஆண்டில் பிரிவு ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இருவருமே தங்களுக்கு விவாகரத்து வேண்டி விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அவர், என்னுடைய நான்கு குழந்தைகளும் ஒரு கேங். மூத்த மகள் மட்டும் கொஞ்சம் வெகுளி, ஆனால்இரண்டாவது மகள், செல்வராகவன், தனுஷ் வெவரம். இவர்களில் என்னுடைய மருமகள்தான் ரொம்ப பாவம். இவர்கள் பேசிக்கொள்ளும் பாஷை கூட தெரியாது. அவங்களுக்கு செட் ஆகல, இந்த குடும்பத்துல வந்து மாட்டிகிட்டோமே என்று நினைத்து இருப்பார். ஆனால் இப்போ அப்படி இல்லை செட் ஆகிவிட்டார் என்று கஸ்தூரி ராஜா பேசியிருப்பார்.
இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள், கஸ்தூரி ராஜா யாரை சொல்கிறார்? ஐஸ்வர்யாவையா இல்லை சோனியா அகர்வாலையா என்று கமெண்ட் செய்து வருகின்றனர் .