நல்ல பெயரை சம்பாதிச்சு இருக்கேன், மானத்தை வாங்கிடாத!! கீர்த்தி சுரேஷ் அப்பா சொன்ன வார்த்தை..

Keerthy Suresh Tamil Actress Actress Raghuthatha
By Edward Aug 28, 2024 07:30 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ் - ரகு தாத்தா

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

நல்ல பெயரை சம்பாதிச்சு இருக்கேன், மானத்தை வாங்கிடாத!! கீர்த்தி சுரேஷ் அப்பா சொன்ன வார்த்தை.. | Keerthy Suresh Share When Start Act Father Advise

மகாநடி படத்தில் நடித்து அதற்கான தேசிய விருதை பெற்ற கீர்த்தி சுரேஷ், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நடிப்பில் ரகு தாத்தா படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தின் பிரமோஷனுக்காக நடிகை சுஹாசினி எடுத்த பேட்டியொன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், அமெரிக்காவுக்கு செல்லாமல் நடிப்பில் ஆர்வம் அதிகரித்து மாடலிங் துறையை தேர்வு செய்தேன்.

அப்பா, அம்மா அறிவுரை

நடிக்க போகிறேன் என்று தெரிந்து அம்மா இரண்டு அறிவுரை கொடுத்தார்கள். ஒன்னு, நேரத்தை சரியாக பார்த்துக்கொள்ள வேண்டும். இன்னொன்று, இயக்குனர் முதல் யூனிட் பாய் வரை அனைவரையும் சரிசமமாக பார்க்க வேண்டும் என்றார்.

அப்பா என்னிடம், நான் நல்ல பெயரை சம்பாதித்து வெச்சு இருக்கிறேன், மானத்தை வாங்கிடாத என்று முதல் வார்த்தையாக அதைத்தான் சொன்னார் என்று கீர்த்தி சுரேஷ் காமெடியாக பகிர்ந்துள்ளார்.