அதற்கு என்று ஒருநேரம் காலம் வரவேண்டும்.. ஜெயம் ரவி தோழி கெனீஷா கூறிய அதிரடி தகவல்

Jayam Ravi Kenishaa Francis
By Bhavya Sep 25, 2024 09:30 AM GMT
Report

ஜெயம் ரவி - ஆர்த்தி 

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கும் தலைப்பு ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து குறித்து தான்.

ஒரு புறம் ஜெயம் ரவி தன் குடும்ப நலன் கருதி விவாகரத்து பெறுகிறேன் என்று விளக்கம் அளித்திருந்தாலும் மறுபக்கம், அந்த முடிவுகள் அனைத்தும் தன்னை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்டது என்று மறுத்துள்ளார் ஆர்த்தி.

அதற்கு என்று ஒருநேரம் காலம் வரவேண்டும்.. ஜெயம் ரவி தோழி கெனீஷா கூறிய அதிரடி தகவல் | Kenisha Talk About What Is Healing Theraphy

இவ்வாறு இரு தரப்பும் தங்கள் கருத்தை முன் வைக்க, ஜெயம் ரவி தோழியும், பாடகியுமான கெனீஷா தான் இவர்கள் விவகாரத்திற்கு காரணம் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அதற்கு என்று ஒருநேரம் காலம் வரவேண்டும்.. ஜெயம் ரவி தோழி கெனீஷா கூறிய அதிரடி தகவல் | Kenisha Talk About What Is Healing Theraphy

சமீபத்தில், இது குறித்து ஜெயம் ரவி செய்தியாளர்களிடம் " என் தனிப்பட்ட வாழ்க்கையில் மற்றவர்களை வைத்து பேசாதீர்கள், கெனீஷா எனக்கு ஒரு நல்ல தோழி வருங்காலத்தில் அவருடன் இணைந்து ஒரு ஹீலிங் செண்டர் தொடங்குவதே என் திட்டம் என்று கூறியிருக்கிறார்.

கெனீஷா பேட்டி

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கெனீஷா தான் யார் என்பதை பற்றியும், ஹீலிங் தெரபி என்றால் என்ன என்பதை குறித்தும் விள்ளகியுள்ளார்.

அதற்கு என்று ஒருநேரம் காலம் வரவேண்டும்.. ஜெயம் ரவி தோழி கெனீஷா கூறிய அதிரடி தகவல் | Kenisha Talk About What Is Healing Theraphy

அதில், " நான் ஒரு வகையில் தமிழ் பெண் தான், என் அப்பா ஒரு தமிழர், என் அம்மா ஆப்பிரிக்கர். அவர் எஸ்.பி.பியுடன் சேர்ந்து பாடி இருக்கிறார். என் குடும்பம் ஒரு இசை குடும்பம் என்பதால் எனக்கு இசை மீது ஆர்வம் ஏற்பட்டது.

நான் ஹீலிங் தெரபிக்காக முறைப்படி உரிமம் பெற்றுள்ளேன். ஆரம்பத்தில் சைக்காலஜிதான் படித்தேன் ஆனால் அது மக்களை குணப்படுத்த போதுமானதாக இல்லை என்று உணர்ந்து பின் ஹீலிங் தெரபி பக்கம் வந்தேன்.

இதில் எட்டு வகையான நிலை உள்ளது அதனை முறைப்படி கற்று இருக்கிறேன். தற்போது, அதன் மூலம், பலருக்கும் சிகிச்சை அளித்து வருகிறேன். மேலும்,என் கேரியரே இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. என்னதான் உழைத்தாலும் அதற்கு என்று ஒருநேரம் காலம் வரவேண்டும், அது என் வாழ்க்கையில் இப்போதுதான் தொடங்கி உள்ளது" என்று கூறியுள்ளார்.