கல்யாணத்துக்கு முன் பாலியல் உறவு..மீண்டும் குஷ்பூவின் விவாதமான பேச்சு..
குஷ்பூ
நடிகையும் அரசியல் பிரபலமுமான நடிகை குஷ்பூ, தற்போது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் பேட்டியளித்தும் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறது. சமீபத்தில் கல்யாணத்திற்கு முன் ஏற்பட்ட உறவு குறித்து பேட்டியுள்ளார்.
அதில், திருமணத்திற்கு முன் உறவு நடக்குதுன்னு அப்பவே நான் சொன்னேன், இன்னைக்கு குப்பைத் தொட்டியில் குழந்தை இருப்பதை நாம் பார்க்கிறோம். பெங்களூரில் 7 ஆயிரம் மாணவர்களுக்கு பால்வினை நோய், இருக்கு என்று சொன்னார்கள்.
திருமணத்திற்கு முன் உறவு வைத்துக்கொள்ளும் நிலையில் எப்படி உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் சொல்லித்தர வேண்டும். அந்தவொரு இக்கட்டான நிலையில் தான் இருக்கிறோம் என்று பேசியிருக்கிறார்.
இதற்குமுன் 2005ல் திருமணத்திற்கு முன் பெண்கள் பாதுகாப்பான முறையில் உறவு வைத்துக் கொள்வதில் தவறு இல்லை, மனைவியாக வருபவள் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று இளைஞர்கள் எதிர்பார்ப்பது நியாயம் இல்லை என்று பெசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.