இந்த நடிகைதான் வேண்டும்! கடைசில் இரு படத்திலும் புக் செய்த இயக்குநர் சங்கர்..
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் என்று பேர் பெற்றவர் இயக்குநர் சங்கர். 2.0 படத்திற்கு பிறகு கமல்ஹாசனுடன் இந்திய 2 படத்தின் ஆர்வத்துடன் இயக்கி வந்தார். ஆனால், படப்பிடிப்பில் விபத்து, கொரோனா லாக்டவுன் என படப்பிடிப்பு தள்ளி சென்று வருகிறது.
இதனால் வழக்கையும் லைக்கா நிறுவனம் மூலம் பிரச்சனையை சந்தித்தார். அதற்கு காரணம் இந்தியன் 2 படத்தை விட்டுவிட்டு தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்தும் பாலிவுட்டில் ஒரு படமும் என கமிட்டாகியது தான்.
இந்த பிரச்சனைகளுக்கும் மீறி தன்னுடைய மகளின் திருமணத்தை சில தினங்களுக்கு முன்பு நடத்தி வைத்தார். தற்போது படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், ராம்சரணின் படத்திலும், பாலிவுட்டில் ரன்வீன் சிங்கின் படத்திற்கு கதாநாயகியின் தேர்வு பல மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இரு படத்தில் இரு நடிகைகளாவது நடிப்பார்கள் என்று கூறப்பட்டது. அதற்காக முக்கிய கதாபாத்திரத்தில் இரு படங்களுக்கும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.