15 லட்சம் பணம் போச்சு, வாய்ப்பும் போச்சு!! புலம்பித்தள்ளும் சியான் விக்ரம் பட நடிகை கிரண்..
சினிமாவில் வாய்ப்பில்லாமல் ஓரங்கட்டப்பட்ட நடிகைகள் வேறு முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். அப்படி தான் நடிகர் சியான் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலாமான நடிகை கிரண் ரத்தோட்டும் அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். ஜெமினி படம் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து அஜித்தி வில்லன், ஸ்ரீகாந்தின் வின்னர், கமல் ஹாசனின் அன்பே சிவன் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.
இதனை தொடர்ந்து உடல் எடை கூடியதால் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து குணச்சித்திர ரோலில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் சம்பாதித்து வருகிறார்.
இந்நிலையில், கிரண் ரத்தோட் கேன்ஸ் திருவிழாவில் கலந்து கொண்டு ரெட் கார்ப்பேட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்று நினைத்து விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். ஏப்ரல் 19 ஆம் தேதி விண்ணப்பித்த விசா இன்று வரை தனக்கு கிடைக்கவில்லை என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார் கிரண் ரத்தோட்.
கேன்ஸ் திருவிழாவிற்கு செல்ல விமான டிக்கெட் உட்பட பல விஷயங்களை தயார் செய்து வைத்திருக்கிறார். விசா கிடைக்கவில்லை என்பதால் அதனால் தனக்கு 15 லட்சம் ரூபாய் பணமும் போச்சு என்றும் கேன்ஸ் திருவிழாவிற்கு கலந்து கொள்ளும் வாய்ப்பும் போச்சு என்று கூறி புலம்பி இருக்கிறார்.