50 கோடி வீடு, சொகுசு கார் வாங்கி கொடுத்தாரா!! கோபத்தில் கிருத்திகா உதயநிதி பதிலடி..
கடந்த ஒரு மாத காலமாக நடிகை நிவேதா பெத்துராஜ் பற்றிய செய்திகள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு பேசுபொருளாக மாறியிருக்கிறது. நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடியாக நடித்த போது நிவேதா பெத்துராஜுக்கு துபாயில் 50 கோடியில் பங்களா வாங்கி கொடுத்தார் என்ற செய்தியை பிரபல விமர்சகர் சவுக்கு சங்கர் தெரிவித்திருக்கிறார். அவர் மீது நிவேதா பெத்துராஜுக்கு Possessive இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த விசயம் பூதாகரமாக பேசப்பட்ட நிலையில் நிவேதா பெத்துராஜ், இதுகுறித்து ஆதங்கமாகவும் எனது குடும்பத்தினரும் நானும் மிகுந்த ம்ன அழுத்ததில் இருப்பதாகவும் கூறி ஒரு பதினை பகிர்ந்தார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மீண்டும் சவுக்கு சங்கரிடம் இதுபற்றி கேட்ட போது, நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன், என் மீது வழக்கு கூட அவர் போடட்டும் என்று அழுத்தமாக கூறி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
அண்மையில் போதை கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் கைது செய்து பட்டிருப்பதை அடுத்து அவர் கருப்பு பணத்தின் மூலம் தான் மங்கை திரைப்படத்தை கிருத்திகா இயக்கியிருக்கிறார்.
அப்படத்தினை போதை கடத்தல் விவகாரத்தில் கைதான தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தான் தயாரித்தார் என்றும் கருப்பு பணத்தை வைத்து தான் மங்கை படத்தை கிருத்திகா இயக்கியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து உதயநிதி மனைவியும் இயக்குனருமான கிருத்திகா பதிலடி கொடுத்திருக்கிறார். மீடியாவில் மனிதர்களின் நடவடிக்கைகளை பார்த்து வியப்பாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.