உன் கூட செத்து போய்டவான்னு கேட்பேன்!! அம்மாவிடம் அந்த வார்த்தை கேட்ட விஜய் டிவி புகழ்..
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் KPY புகழ். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்த புகழ், குக்வித்கோமாளி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் தன் அப்பா, அம்மா, அண்ணனுடன் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார்.
சின்ன வயது முதல் புகழ் பல கஷ்டங்களை சந்தித்து வந்திருக்கிறான். அப்படி கஷ்டத்தில் இருந்து இந்த இடத்திற்கு வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சேலை கட்டி நடிக்கும் போதெல்லாம் என் உறவினர்கள் கிண்டல் செய்து விமர்சிப்பார்கள். ஆனால் அந்த சேலையை கட்டி நடித்து அவர்கள் என் வீடு தேடி வரும் அளவிற்கு புகழ் இப்போது வளர்ந்திருக்கிறான்.
புகழ் வருகிறான் என்றாலே என் வீட்டுக்கு கூட்டம் தேடி வந்துவிடுவார்கள். கோயில் திருவிழாவிற்கு 10 நிமிடம் வந்து எம் ஆர் ராதா வாய்ஸில் பேசியதும் போலிஸ்காரர்களே அவனுடன் புகைப்படம் எடுத்தார்கள்.
என் மகன் தப்பான விசயம் செய்து எந்த பெயரும் வாங்கியதில்லை. ஏனென்றால், சின்ன வயதில் இருந்தே கஷ்டம் தான். அவர் அப்பா ஆரம்பத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அதனால் ரெண்டு புள்ளைகளும் சம்பாதிக்க படிப்பை முடித்து சம்பாதித்தார்கள்.
கடலூரில் கட்டிய 7 லட்சம் வீடை இடித்தார்கள். அதன்பின் எங்க ஊரில் வீட்டை கட்டி எங்களுக்கு கொடுத்தான். சின்ன வயதில் இருந்தே கஷ்டம் தான் அனுபவித்திருக்கிறான். இப்போது தினமும் விமானத்தில் பறக்கிறான், அவனால் நாங்களும் சந்தோஷமாக இருக்கிறோம். என்னை இப்போது கடலூரில் கவுரமாக வாழ்ந்துட்டு இருக்கிறோம்.
இதனை தொடர்ந்து பேசிய புகழ், என் அம்மாவிடம் சின்ன வயசில் கேட்பேன். அம்மா நீ செத்துப்போயிட்டா, நானும் உன் கூடசெத்து போய்டவான்னு கேட்பேன். அந்தளவிற்கு அவன் கஷ்டப்பட்டு இருக்கிறான் என்று புகழ் அம்மா கூறியிருக்கிறார்.
மேலும் யாருக்கும் தெரியாமல் பலருக்கு உதவி இருக்கிறான், பல உயிர்களை காப்பாற்றி இருக்கிறான், யாருக்கும் தெரியனும் என்று அவசியம் இல்லை தெரிந்தால் என்ன நடக்க போகிற்து, எங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்று புகழ் அம்மா தெரிவித்துள்ளார்.