ரஜினிக்கு தெரிந்தே மீனாவுக்கும் குஷ்பூவுக்கும் நடந்த விஷயம்.. நயன் தாராவை வைத்து ஏமாற்றிய இயக்குனர்..
80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பூ. முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த குஷ்பூ, இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரு பெண்களுக்கு தயான குஷ்பூ, படங்களில் நடித்து பிரபல கட்சியின் இணைந்து பல விஷயங்களை செய்தும் வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில் கலந்து கொண்டு பேசிய குஷ்பூ சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, அண்ணாத்த படத்தில் நடிக்க இயக்குனர் சிறுத்தை சிவா என்னிடமும் மீனாவிடமும் கதை சொல்லும் போது படத்தில் ரஜினிக்கு ஜோடியில்லை என்று கூறினார்.
நீங்கள் இருவரும் முறைப்பெண்கள், அவர் மீது ஆசைப்பட்டு அது நடக்காமல் போய்விட்டது. பின் அவருடைய தங்கை காணாமல் போக நீங்களும் அவருடன் சேர்ந்து தேடுவது போன்ற கதை என்று கூறி, இருவருக்கும் அதிக முக்கியத்துவம் என்று சொன்னார்.
திடீரென இந்த கதைக்குள் நயன் தாராவை சேர்ந்தது படக்குழு. பின் எனக்கும் மீனாவுக்கு சாதாரண கேரக்டர் போன்று கதை எழுதப்பட்டது. ஷூட்டிங் தளத்தில் மீனாவும் நானும் கதை இப்படி மாறியது பற்றி பேசினோம்.
ஆனால் ரஜினிக்காக நடித்துக்கொடுத்துவிட்டு போவோம் என்று இருவரும் முடிவெடுத்து நடித்தோம், இதுவரை அந்த படத்தில் ஏன் நடித்தோம் என வருந்துவதாகவும் நடிகை குஷ்பூ அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.