காதல் பிரேக் அப்.. திருமணத்தில் அழுத கார்த்திக்!! நடிகை குஷ்பு ஓபன் டாக்
90 களில் ஹீரோக்களுக்கு நிகராக தனி ரசிகர் கூட்டமே வைத்திருந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் தமிழ் மலையாளம், ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
குஷ்பு கடந்த 2000 -ம் ஆண்டு இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர் சி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
தற்போது குஷ்பூ அளித்த பேட்டியில், "எங்களது காதல் விஷயம் கார்த்திக்கு தெரியும். எங்களுடைய காதல் கைகூடுமா? இல்லையா என்ற ஒரு பயம் கார்த்திக்குக்கும் இருக்கும். ஏன் என்றால் நானும் சுந்தர் சி -யும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வோம், பிரேக் செய்துகொள்வோம், பின்பு சேர்ந்துவிடுவோம்".
"எங்களுடைய திருமண செய்தியை கேட்டு கார்த்திக் ஆனந்தத்தில் அழுதார். அவருடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினோம். கார்த்திக் அழுது கொண்டே ஆசீர்வாதம் செய்தார்" என்று குஷ்பு கூறியுள்ளார்.