இளையராஜாவை மிரட்டி திருமணத்திற்கு வர வெச்சேன்!! பகீர் கிளப்பிய தயாரிப்பாளர்..
இசைஞானி இளையராஜா பற்றி சமீபகாலமாக விமர்சித்து பலர் பேசியும் புகழ்ந்து வருவதும் அதிகரித்து வருகிறது. அப்படி சமீபத்தில் தன்னுடைய தம்பி கங்கை அமரனின் மகன் பிரேம்ஜியின் திருமணத்திற்கு இளையராஜா செல்லவில்லை என்ற விமர்சனம் இணையத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதற்கிடையில் பிரபல தயாரிப்பாளரான டி சிவா, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில், இளையராஜ தொடர்ந்து படங்களுக்கு இசையமைத்து கொண்டே இருந்ததால் சினிமா நிகழ்ச்சிகள், விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் என்று எதிலும் அவரால் கலந்து கொள்ளமுடியாது.
அப்படி இருக்கையில் சின்ன மாப்ளே படம் உருவாகிக்கொண்டிருந்த போது எனக்கு திருமணம் முடிவாகியதால் இளையராஜாவிடம் சென்று “விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தர், நீங்கள் மூவரும் என்னுடைய திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருபதால் நீங்கள் வரவேண்டும் என்று கூறினேன்.
அவரோ எப்படியா முடியும், ஒரு நாளைக்கு 2 படம் பண்ணிட்டு இருக்கேன் என்று கூறினார். ஆனால் நான் நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என்றதும், என்னய்யா மிரட்டுறா, கண்டிப்பா வரணுமா என்று கேட்டதற்கு ஆமாம் என்று கூறினேன். பின், தேதியை கேட்டு சொன்னபடியே எனக்காக கோபிச்செட்டிப்பாளையம் வந்து வாழ்த்திவிட்டு சென்றார்.
அந்த ஒரு நாள் இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவில் இல்லை. அப்படி நடந்ததை கோலிவுட்டே ஆச்சரியமாக பேசியதாக இளையராஜாவை புகழ்ந்து கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் டி சிவா கூறியிருக்கிறார்.