அந்த மாதிரியான காட்சிகளில் நடிக்க மாட்டேன்... வெளிப்படையாக பேசிய லெஜண்ட் சரவணன்..
கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். இவர் எவ்வளவு பெரிய தொழிலதிபர் என்பதை தமிழகமே அறியும்.
தனது தொழில் ஒரு பக்கம் இருந்தாலும் சினிமாவில் களமிறங்கி தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை தற்போது உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் இரண்டாவதாக வெளிவரவிருக்கும் படம்தான் லீடர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த விஷயத்தை செய்ய மாட்டேன் என சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது குறித்து பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
"என் வாழ்க்கையில் நான் ஒருபோதும் சிகரெட் பிடித்ததில்லை, மது அருந்தியதில்லை. படங்களிலும் கூட புகைபிடிப்பது போல், மது அருந்துவது போல் நடிக்க மாட்டேன்" என பேசியுள்ளார்.