6 மாதம் சிறைக்கு செல்லும் சூர்யா பட இயக்குனர்.. அதிர்ச்சியில் திரையுலகம்

N. Lingusamy The Warriorr
By Edward Aug 22, 2022 09:19 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ஆனந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் இயக்குனர் லிங்குசாமி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரன், ஜி, சண்டகோழி, பீமா, பையா போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தார்.

இதனையடுத்து சூர்யா நடிப்பில் அஞ்சான் படத்தினை இயக்கி தயாரித்ததால் பல கோடி நட்ஷத்தை அடைந்தார். இதன்பின் 4 வருடங்கள் காத்திருப்பிற்கு பிறகு சண்டகோழி 2 படத்தையும் இயக்கி தோல்வியை தழுவினார்.

இப்படி தோல்விகளை சந்தித்த லிங்குசாமி செக் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

அவர் இயக்கி டிராப்பான ஒரு படத்திற்காக பெற்ற ரூ. 1.03 கோடிக்கடனை திரும்ப செலுத்தவில்லை என புகாரளிக்கப்பட்டு விசாரணை செய்து வந்த நிலையில் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டை வித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளனர்.

சமீபத்தில் கூட வாரியர் படத்தில் பிரஸ் மீட்டிங்கில் கதறி அழுத விசயம் பெரியளவில் பேசப்பட்டது.

Gallery