மாநாடு படத்தில் தனுஷா? ரசிகர்களிடையே சண்டை மூட்டிவிட இயக்குநர் எடுத்த பிளான்..

simbu fans dhanushkodi venkatprabhu maanaadu
By Edward Nov 29, 2021 06:40 AM GMT
Edward

Edward

Report

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்புவின் கம்பேக் படமாக அமைந்து வருகிறது மாநாடு படம். டைம் லூப் கதையை மையமாக வைத்து கவனத்துடன் கதை எடுத்துள்ளார் என்று ரசிகர்கள், நட்சத்திரங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

படத்தின் மீது சிலர் எதிர்ப்பை கொடுத்து வரும் நிலையில் மாநாடு படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யாவுக்கு தனுஷ் கோடி என்று பெயரிடப்பட்டது. இதற்கு சில தனுஷ் ரசிகர்கள் சீண்டி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் படத்தில் தனுஷ் பெயர் வர காரணம் என்ன என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

வில்லன் கதாபாத்திரத்திற்கு ஒரு பவர்ஃபுல் பெயர் வேண்டும் என்பதற்காகவும், ரஜினி-கமல் என்பதை மாதிரி சிம்பு என்றால் தனுஷ் என்று தான் சொல்வார்கள். அப்படி தனுஷ் கோடி என்று வைத்தோம். இதற்கு ரசிகர்கள் சண்டை போடுவார்கள், ஆனால் தன்ஷ் பாராட்டுவார் என்று கூறியுள்ளார்.

சிம்பு கதாபாத்திரத்தை விட எஸ் ஜே சூர்யா ரோல் நல்லதாக அமைந்தது என கூறியுள்ளார். மேலும் வில்லன் பிஜிஎம்மிற்கு யுவனை நான் கேட்கவில்லை அவராகவே பண்ணினார் என்று கூறியுள்ளார்.