நுரையீரலில் பிரச்சனை.. நடிகை மகாலட்சுமி கணருக்கு இப்படியொரு நிலையா..
சின்னத்திரை சீரியல் நடிகையாக அனைவரையும் கவர்ந்து வருபவர் நடிகை மகாலட்சுமி சங்கர். கடந்த 2022ல் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்தார். ஏற்கனவே திருமணமாகி மகன் இருக்கும் மகாலட்சுமி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
திடீரென ரவீந்தரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அவர்களின் திருமணம் கேலிக்கிண்டலுக்கு ஆளானாலும், இருவரும் அதைபற்றி கவலைப்படாமல் வாழ்ந்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு பணமோசடியில் சிக்கி சிறைக்கு சென்ற ரவீந்தர் ஒரு மாதம் கழித்து விடுதலை செய்யப்பட்டார். அதன்பின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியை விமர்சனம் செய்து வரும் ரவீந்தர், தன் உடலுக்கு சில பிரச்சனை இருப்பதாக பிக்பாஸ் விமர்சன வீடியோ ஒன்றில் கூறியிருக்கிறார்.
அந்த வீடியோவில், தனக்கு நுரையீரலில் சில இன்ஃபெக்ஷனாகி இருப்பதாகவும் நெஞ்சு பகுதியில் அதிக வலி இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதனால் ஒரு வாரம் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆக்ஸிசன் அளவு குறைவாக இருப்பதால், மூச்சு சுவாசம் செய்யும் சிகிச்சைக்காக முகத்தில் இந்த டியூப் போட்டுள்ளதாகவும் ரவீந்தர் தெரிவித்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலர் குணம்பெற ஆறுதல் கூறி வருகிறார்கள்.