11 வயதான சூப்பர் ஸ்டார் மகள் பெயரில் நடந்த தில்லாலங்கடி வேலை..!! போலிஸில் புகாரளித்த மனைவி
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதா, சமீபத்தில் ஹைதராபாத் காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கு திரைத்துறையில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் மகேஷ் பாபுவிற்கு 11 வயதான சித்தாரா என்ற மகள் இருக்கிறார்.
சர்க்கார் வாரி பாட்டா படத்தில் அறிமுகமாகினார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து 2 மில்லனுக்கும் மேல் ஃபாலோவர்ஸ்களை வைத்திருக்கிறார் சித்தாரா.
இந்நிலையில் சித்தாரா பெயரில் போலியான கணக்குகளில் இருந்து ரசிகர்களுக்கு லிங்க் அனுப்பபட்டு பண மோசடி நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இதனை எச்சரிக்கை செய்யத்தான் மகேஷ் பாபுவின் மனைவி நர்மதா போலிசாரிடம் சென்று புகாரளித்திருக்கிறார்.
போலிக்கணக்கினை உருவாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இப்படியான போலி அக்கவுண்ட் லிங்குகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறி சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டியும் புகாரளித்திருக்கிறார்.