250 கோடி சொத்து!! 3வது திருமணம் செய்யப்போகும் ஜாமீனில் வெளியே வந்த நடிகர் பாலா..
தமிழ், மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பாலா. இவர் இயக்குநர் சிறுத்தை சிவாவின் உடன்பிறந்த தம்பியாவார்.
இரண்டு விவாகரத்து
கடந்த 2010ல் பாடகி அம்ருதாவை திருமணம் செய்து சில ஆண்டுகளுக்கு பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர். 2016ல் முதல் மனைவியை விவாகரத்து செய்த பாலா, 2021ல் எலிசபெத் என்ற மருத்துவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ரகசியமாக இவர்களின் திருமணம் நடந்த நிலையில், தற்போது இரண்டாம் மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் பாலா.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முதல் மனைவி அம்ருதா, காவல் நிலையத்தில் பாலா தன்னையும் தன் மகளையும் தினமும் வழிமறித்து தொல்லை கொடுப்பதாக கூறி புகாரளித்திருந்தார்.
இதனையடுத்து காவல் துறையினர் பாலாவை ஆஜராகும் படி கூறியும் ஆஜாராகாததால் எடப்பள்ளியில் உள்ள பாலா, வீட்டில் இருந்தபோது கைது செய்யப்பட்டார்.
தற்போது ஜாமீனில் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பாலா, தன்னிடம் 250 கோடி சொத்து இருக்கிறது. தனது குடும்ப சொத்தில் இருந்து பங்காக இந்த 250 கோடி வந்ததாகவும் இந்த சொத்து குறித்து அறிவிப்பு வெளியானதும் தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் வருகிறது.
மூன்றாவது திருமணம்
இதனால் கேரளாவை விட்டு வேறு எங்காவது சென்றுவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். மூன்றாவது முறையாக சட்ட ரீதியாக திருமணம் செய்து குடும்பத்துடன் வாழ விரும்புகிறேன் என்றும் தனது 250 கோடி சொத்துக்கு நான் சொல்பவரே வாரிசு என்று அந்த பேட்டியில் பாலா கூறியிருக்கிறார்.
இப்படி கூறிய பாலா இரண்டாம் மனைவி எலிசபெத்தை விவாகரத்து செய்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்து வருகிறது.