திருமணமானதை மறைத்து டேட்டிங் செய்த மலையாள நடிகர்!! நடிகை மம்தா மோகந்தாஸ் ஓபன் டாக்.
நடிகை மம்தா மோகந்தாஸ் தன்னை ஒரு பிரபலமான நடிகர் டேட்டிங் செல்ல அழைத்ததாகவும் அவர்மீது புகாரும் அளித்துள்ளார். சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையறத்தாக்க, எனிமி, மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் நடிகை மம்தா மோகந்தாஸ். இருமுறை புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்ட மம்தா, அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

சமீபத்தில் பேசிய மம்தா, தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார்.
மலையாள நடிகர்
அதில், எனக்கு காதல் செய்வது அல்லது டேட்டிங் செய்வது போன்ற விஷயங்களில் அதிக அனுபவம் இல்லை. ஆனால் நான் புற்றுநோய் பாதிக்கப்பட்ட சமயத்தில், ஒரு பெண்ணாக என் சொந்த எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற விரும்புனேன்.
அப்போது ஒரு பிரபலமான மலையாள நடிகர் என்னை டேட்டிங் செல்ல அழைத்தார். அதற்கு நான் என் அம்மாவிடன் ஒப்புதல் பெற்றேன். ஆனால் ஒரு மாதத்திற்குப்பின் தான் அவருக்கு வேறொரு பெண்ணுடன் ஏற்கனவே நிச்சயதார்த்தமாகியுள்ளது என்பதை கண்டுபிடித்தேன்.

அதை என்னிடம் அவர் மறைத்திருந்தார். அது ஒரு உண்மையில் அதிர்ச்சியான விஷயமாக அமைந்தது. பின் நான் வேறொருவரை சந்தித்தேன். ஆனால் என் நேரத்தை வீணாடித்தார். அதனால் அந்த காதலும் டேட்டிங்கும் தேவையற்றது என்பதை உணர்ந்து கொண்டேன்.
என் சகோதரியின் திருமணத்தில் தான் முதன்முதலாக பிரஜித்தை சந்தித்தேன். எங்கள் இருவருக்குமான பிடித்த விஷயங்கள் போதுமானதாக இருந்தால் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம்.

முதல் பிரஜித் தான் கேட்டார், எனக்கும் அது சரி என பட்டது. உடனடியாக என் தந்தியிடம் விருப்பத்தை சொன்னேன், எங்கள் திருமணம் எளிமையாக நடந்தது. திருமணத்தை வாழ்நாள் முழுவதுக்குமான உறவாக நினைத்தேன், ஆனால் 6 மாதத்தில் நாங்கள் பிரிய நேர்ந்தது.
அது மிகவும் கடினமான முடிவு, இருந்தாலும் அந்த நேரம் நான் நோயால் அவதிப்பட்டிருந்தேன். மீண்டும் நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன், ஆனால் அது உண்மையான உறவாக இருக்க வேண்டும். வாழ்க்கையை அர்ப்பணிப்புடன் செய்வதில் இருவரும் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருக்க வேண்டும் என்று ஓபனாக மம்தா பேசியிருக்கிறார்.