கேன்சரால் இறந்துடுவேன்னு சொன்னாங்க.. மீண்டு வந்த நடிகை மம்தா மோகன் தாஸ் ஓபன் டாக்..
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை அபிராமி. வானவில், சமுத்திரம், தோஸ்த் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த நடிகை அபிராமி, கமல் ஹாசனுடன் விருமாண்டி படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். விருமாண்டி படத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டிலாகினார்.
அதன்பின் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் அபிராமி, நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் அபிராமி. மேலும் நடிகை மம்தா மோகன் தாஸும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். நாளை ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள் படக்குழுவினர்.
புற்றுநோய் பாதிப்பு காரணமாக சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து விலகி இருந்தார் நடிகை மம்தா மோகன் தாஸ் மீண்டும் நடிக்க ஆர்மபித்துள்ளார். சமீபத்தில் நடிகை அபிராமி - மம்தா மோகன் தாஸ் அளித்த பேட்டியொன்றில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். கேன்சர் பாதிப்பு ஏற்பட்ட போது இறந்துவிடுவேன் என்று பலர் சொன்ன போது நான் நம்பவில்லை.
உடலில் கேன்சர் கட்டி ஒவ்வொரு இடத்துக்கும் டிராவல் செய்து கொண்டிருந்தபோது, ஓ நீ உன் வேலையை பார்க்குறியா, நான் என் வேலைடை பார்க்கிறேன் என்று நடிக்க ஆரம்பித்துவிட்டேன். ஒருசில தமிழ் படங்களை உடல்நலக்குறைவு காரணமாக தவித்து விட்டேன் என்று கூறியிருக்கிறார்.