டிடி எஃப் வாசன் ஒரு குப்பை.. என்ன வேணும்னாலும் செய்வான்!! கொந்தளித்த மஞ்சள் வீரன் இயக்குநர்..
டிடிஎஃப் வாசன்
யூடியூப் மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருந்து சர்ச்சையில் சமீபகாலமாக சிக்கி வருபவர் டிடிஎஃப் வாசன். பல ரசிகர்களை வைத்திருக்கும் டிடிஎஃப் வாசன், யூடியூப்பில் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்களை வைத்திருக்கிறார்.
சமீபத்தில் யூடியூப் வீடியோக்களை தாண்டி, மஞ்சள் வீரன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது.
செல் அம் என்பவர் இயக்க திட்டமிட்டு பூஜையும் போடப்பட்ட நிலையில் மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் வீரன் நீக்கப்பட்டார் என்றும் அவருக்கு பதில் வேறொருவர் நடிப்பார் என்றும் கூறினார். எதற்காக நீக்கப்பட்டார் என்ற காரணத்தை அவர் சொல்லவில்லை.
கோபத்தில் டிடிஎஃப்
இதுகுறித்து யூடியூப் சேனலில் பேசிய டிடிஎஃப் வாசன், இயக்குநர் செல் அம், என்னை படத்தில் இருந்து நீக்கியது குறித்து தெரியாது என்றும் அவர் ஒருமுறை கூட என்னிடம் பேசியதில்லை என்றும் கூறியிருக்கிறார்.
அதுமட்டும் இல்லாமல் அவர் படப்பிடிக்கிற்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று சொல்லி இருந்தார். ஆனால் மஞ்சள் வீரன் படத்தின் போட்டோஷூட் மட்டுமே நடந்தது, பூஜைக்க்கு கூட நான் தான் பணம் கொடுத்தேன்.
இதுபற்றி பேச நான் அவரை பலமுறை தொடர்பு கொண்டேன், அவர் என் அழைப்பை எடுக்கவில்லை. வேறு யார் யாரோ போன் எடுத்து பிசியாக இருக்கிறார் என்று கூறுகின்றனர்.
நான் செலவு செய்த பணம் எனக்கு வேண்டாம். ஆனால் என்னை எதற்காக படத்திலிருந்து நீக்கினார் என்ற காரணம் சொன்னால்போதும். பணத்தை வாங்கிக்கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார் என்று டிடிஎஃப் கூறியிருக்கிறார்.
இயக்குநர் செல் அம்
இதனை தொடர்ந்து இயக்குநர் செல் அம், முதலில் அவருடன் பழகும் போது தங்கமாக தெரிந்தார். ஆனால் நான் அவரை தங்கம் என்றேன், ஆனால் பழகபழகத்தான் அவர் தங்கம் இல்லை குப்பை என்று தெரிந்தது.
வேண்டாத பொருளைத்தான் குப்பையில் போடுவார்கள், அதனால் தான், நான் அவரை குப்பையில் போட்டேன். அந்த குப்பையை வீட்டில்வைத்து இருந்தால் வீடு நாரிவிடும்.
அவரை படத்தில் இருந்து நீக்க காரணம் என்னிடம் சொல்லி இருக்கலாம என்று கேட்கிறார், அப்படி சொல்வதற்கு கூட தகுதியில்லாதவர். செலவு செய்தேன், ஏமாற்றிவ்ட்டார் என்று வீடியோ போட்டு சம்பாதிக்கிறார்.
வாசன் வியூஸ்க்காக என்ன வேண்டுமானாலும் செய்வார், நான் தான் செலவு செய்கிறேஎன் கடனும் நான் தான் கட்டுகிறேன். உண்மை என்ன என்று கடவுளுக்கு தெரிந்தால் போது பொறுத்து பொறுத்து பார்த்தேன் இனி வாசன் திருந்தவே மாட்டார் என்று பேசியிருக்கிறார் இயக்குநர் செல் அம்.