மதம் மாறியபோது யுவன் அப்பா ரியாக்ஷன்!! இளையராஜா வராத காரணம் இதுதான்..
யுவன் சங்கர் ராஜா
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் யுவன் சங்கர் ராஜா, தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி இருக்கிறார். இசையமைப்பாளராக மட்டுமின்றி தயாரிக்காவும் படங்கள் இயக்கவும் தனக்கு விருப்பம் இருப்பதாக கூறியிருந்தார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன் குடும்ப விஷயங்கள் பற்றி பகிர்ந்துள்ளார். ஜஃப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்த யுவன், இதற்கு முன் இரண்டு திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். மேலும் ஜஃப்ரூன் நிஷா இஸ்லாம் என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள் யுவன் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.
இளையராஜா வராத காரணம்
இஸ்லாம் மதத்திற்கு மாறியது அவரது தந்தை இளையராஜாவுக்கு பிடிக்கவில்லை என்பதாஅல் யுவன் திருமணத்திற்கே வார் செல்லவில்லையாம். இதுதொடர்பான கேள்விக்கு, நான் மதம் மாறியபோது என் அப்பா என்னை தடுக்கவில்லை, மாறாக தினமும் ஐந்து முறை கடவுளைத்தொழுகின்றேன் எனக் கூறுபவனை ஏன் தடுக்க வேண்டும் என்று தான் கூறினார்.
என் திருமணம் திடீரென நடைபெற்றது. நான் இன்று கிளம்பி ஊருக்குப்போகின்றேன், அடுத்த் நாள் திருமணம் என முடிவாகிவிட்டது.
நான் உடனே அப்பாவுக்கு போன் செய்து விவரத்தை சொன்னதும், நான் கல்யாணத்திற்கு வந்துவிடுவேன், அதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை, ஆனால் நான் வருவதால் திடீர் ஏற்பாடுகளை செய்து கல்யாணத்தில் அனைவரும் என்னை கவனிக்க வேண்டும் என்ற நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
எனவே நீங்கள் நல்லபடியாக கல்யாணம் செய்துவிட்டு வாங்க, நான் அங்கு வந்து விடுவேன். என்னால் அங்கிருப்பவர்களுக்கு அசெளகரியம் ஏற்பட வாய்ப்பு இருக்கு என்று அப்பா இளையராஜா கூறியதாக யுவன் தெரிவித்துள்ளார்.