மரணமடைந்த கணவர்!!! நடிகை மீனா இரண்டாம் திருமணத்துக்கு ஓகே சொல்ல இதுதான் காரணம்
தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த மீனா இளம் வயதிலேயே கதாநாயகியாகவும் அறிமுகமாகினார்.
கணவர் மரணம்
முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார். இதன்பின் பெங்களூரை சேர்ந்த என்ஜினியரான வித்யாசாகர் என்பவரை 2009ல் திருமணம் செய்து கொண்டு நைனிகா என்ற மகளையும் பெற்றார். தன்னைப்போல் மகள் நைனிகாவையும் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடிக்க வைத்தார்.
கடந்த ஜூன் மாதம் பெங்களூரில் இருந்த கணவர் நுறையீரல் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இதற்கு காரணம் புறாவின் எச்சம் தான் என்று கூறப்பட்டது. தற்போது அந்த துக்கத்தில் இருந்து மீனா மீண்டு வந்து தோழிகளுடன் நேரத்தினை செலவிட்டு வந்தார். இந்நிலையில் தனியாக இருக்கும் மீனாவிற்கு துணையாக இருக்க இரண்டாம் திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளனர்.
2ஆம் திருமணம்
ஆரம்பத்தில் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த மீனாவிடம், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், தோழிகள் வற்புறுத்தி வந்துள்ளனர். கணவர் இறப்பதற்கு முன் அவரது அப்பாவை இழந்தும் கணவரை இழந்தும் இருந்துள்ளார் மீனா.
தற்போது அதிலிருந்து மீண்டு வந்ததால் தன் மகளின் பாதுக்காப்பிற்கும் எதிர்காலத்திற்கு உனக்கு ஆண் துணை வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். வேறு வழியின்றி மீனா தன் மகளுக்காக தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவரை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளாராம்.
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அவர் குடும்பம் தரப்பில் இதற்கான விளக்கமளித்தால் தான் தெரியவரும். ஏற்கனவே நடிகை சினேகா விவாகரத்து, சமந்தா உடல்நிலை பற்றி தேவையில்லாத வதந்திகள் பரவியதை அடுத்து மீனா மறுமணம் விவகாரமும் தற்போது வெடித்துள்ளது.