2025-ன் உலக அழகி யார் தெரியுமா? இத்தனை கோடி பரிசு தொகையா?
மிஸ் வேர்ல்ட் 2025
ஆண்டுதோறும் உலக அழகி போட்டி நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டு மிஸ் வேர்ல்ட் 2025 அழகி போட்டி தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் மையத்தில் சமீபத்தில் நடந்துள்ளது.
ஒபல் சுசதா
இந்தியாவில் அழகி போட்டி நடப்பது இது 3வது முறை. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழகிகள் கலந்து கொண்ட நிலையில் தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுசாட்டா உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
108 நாடுகளை சேர்ந்த அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொண்ட நிலையில் இந்தியா சார்பில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற நந்தினி குப்தாவும் கலந்து கொண்டிருக்கிறார்.
40 பேர் காலிறுதிக்கு முன்னேறிய நிலையில் நந்தினி குப்தா 8 இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த ஹைசேட் டெரேஜே அட்மாசு என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
அழகி போட்டியை வென்ற மிஸ் வேர்ல்ட் ஓபல் சுசாட்டாவிற்கு அணிவிக்கப்படும் ஜிரீடத்தின் மதிப்பு சுமார் ரூ. 3 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. வெற்றி பெறுவருக்கு ரூ. 1.15 கோடி ரொக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

