63 வயது நடிகர் என் கணவர் என்று எதிர்ப்பார்க்கவில்லை..நம்பிக்கை உடைந்தது!! மிருணாள் தாகூர் ஆதங்கம்..
மிருணாள் தாகூர்
ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வருகிறார் மிருணாள் தாகூர். பாலிவுட், டோலிவுட் என கலக்கிக்கொண்டிருக்கும் இவர், விரைவில் கோலிவுட்டில் என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் Dacoit. இப்படம் இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிருணாள் தாகூர் கடந்த 2025ல் சன் ஆஃப் சர்தார் 2 படத்தில் நடித்திருந்தார். அஜய் தேவ்கன் தயாரித்த இப்படம் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகி வெறும் ரூ.60 கோடி மட்டுமே வசூலித்து தோல்வியடைந்தது.

63 வயது நடிகர்
இப்படத்தில் 63 வயதான சங்கி பாண்டேவுக்கு மனைவியாக மிருணால் தாகூர் நடித்திருப்பார். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்ததோடு, சங்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே, மிருணாள் தாகூரைவிட 6 வயது குறைந்தவர். அப்படியிருக்கும்போது சங்கி பாண்டேவுடன் நடித்ததை பலரும் விமர்சித்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய மிருணாள் தாகூர், சன் ஆஃப் சர்கார் 2 படத்தில் மிகமிக சீனியர் நடிகர், என் கணவர் ரோலில் நடிப்பார் என்று எனகு தெரியாது.
அப்படத்தில் நான் அதை எதிர்ப்பார்க்கவில்லை. அந்த் இடத்திலேயே நான் தோற்றுவிட்டேன், என் நம்பிக்கை எல்லாம் உடைந்துவிட்டது என்று ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார் மிருணால் தாகூர்.