4 கல்யாணம் பண்ண உனக்கு திமிரா? முனியம்மாவுக்கு பதிலடி கொடுத்த வனிதா..
வனிதா
பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கியது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் காமன் மேட் போட்டியில் வெற்றிப்பெற்ற முனியம்மாள் பிக்பாஸ் சீசன் 10 வீட்டிற்குள் போட்டியாளராக சென்றுள்ளார்.

இந்நிலையில் காமன் மேன் போட்டியின் போது முனியம்மாள், வனிதாவிடம் பேசிய விஷயம் தான் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. போட்டியாளர் டார்வின், வனிதாவிடம், நீங்க பல திருமணங்கள் பண்ணியிருந்தாலும், உங்க அப்பா விஜயகுமார் பேரை மட்டும் ஏன் விடாம வச்சுருக்கீங்க என்று கேட்டார்.
அதற்கு வனிதா பெத்தவன் அவன் தானே என்று கூற, போட்டியாளர் மணி, உங்களுக்கு ஏன் இவ்வளவு திமிரு என்றதும், நான் விஜயகுமாரோட பொண்ணுடா! என்று வனிதா பதிலளித்தார்.
அதன்பின் பேசிய முனியம்மா, நீங்க ஒரு தமிழ் பெண் தானே? அப்போவோட திமிரு இருக்குனு சொன்னீங்க என்று கேட்க, கடுப்பான வனிதா, தமிழை முதல்ல ஒழுங்கா சொல்லு, அதைக்கூட சொல்ல தெரியாம என்ன கேள்வி கேட்க வந்துட்ட என்றார்.

முனியம்மா
உடனே முனியம்மா, நான் தமிழை ஒழுங்கா சொல்றேனோ இல்லையோ, ஆனா உனக்கு உங்க சொந்த வாழ்க்கையை ஒழுங்கா வாழத் தெரியலையே, எதற்காக 4 பேரை கல்யாணம் பண்ணீங்க என்று மேடையிலேயே கேட்டுள்ளார்.
ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற வனிதா, உங்க புருஷம், பொண்டாட்டி, அப்பன் பேர்லாம் எனக்கு தெரியாது, தேவையும் இல்லை, ஆனா என் அடையாளம் என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதுதான் என் ஐடெண்டிட்டி, இதற்கு மேல என் பர்சனல் வாழ்க்கையை பத்தி பேசினீங்கன்னா, உங்களைவிட ஒரு கேவலமான ஜந்து இந்த உலகத்திலையே இருக்க முடியாது என்று விளாசியுள்ளார்.