சித்தியின் வளர்ப்பு.. பெற்ற தாயிடம் இருந்து விலகி இருக்கிறேனா? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சைதன்யா...
தெலுங்கு, தமிழ் சினிமா வட்டாராத்தில் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் நாகர்ஜுனா. ராம்நாயுடுவின் மகள் லட்சுமி என்பவரை முதலில் திருமணம் செய்த நாகர்ஜுனா கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளில் விவாகரத்து செய்து பிர்ந்தார். அதன்பின் 1992ல் நடிகை அமலாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். லட்சுமியும் இரண்டாம் திருமணம் செய்து சென்னையில் செட்டிலாகினார்.
அனைவரும் நாகர்ஜுனாவிற்கு பிறந்த மகன் நடிகர் நாக சைதன்யா அமலாவின் மகன் என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் நாகர்ஜுனா - லட்சுமிக்கு பிறந்த மகன் தான் நாக சைதன்யா. முதல் மனைவியை பிரிந்த நிலையில், நாகர்ஜுனாவின் இரண்டாம் மனைவி அமலா தான் வளர்த்து வந்துள்ளார் என்று கூறப்பட்டது. நாகர்ஜுனா அமலாவுக்கு பிறந்தவர் தான் நடிகர் அகில்.
இந்நிலையில் நடிகை அமலா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நாக சைதன்யா என்னுடன் வளரவில்லை. சென்னையில் அவர்களது தாயுடன் தங்கியிருந்தார். அவ்வப்போது ஹைதராபாத் வந்து செல்வார். ந்தையுடன் நேரத்தை செலவிடுவார். மேலும் அகில் மற்றும் நாக சைதன்யா இடையே நல்ல பிணைப்பு இருக்கிறது. அகில் இங்கு வரும் போது சைதுவுடனே இருப்பது வழக்கம், சைது எப்போது வருவான் என்று காத்திருப்பான் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் நாக சைதன்யாவுக்கு, தாய் இரண்டாம் திருமணம் செய்தது பிடிக்காமல் இருந்ததால் தான் அவருடன் சேராமல் ஒதுக்கி வைத்தார் என்ற வதந்தி தகவல்கள் வெளியாகியது. இது குறித்து மறுத்த நாக சைதன்யா, தன் வேலை காரணமாக ஹைதராபாத்தில் இருப்பதாகவும் தான் அடிக்கடி அமெரிக்காவில் இருக்கும் தன் தாயை சென்று பார்த்து வருவதாகவும் அமெரிக்காவில் உள்ள மற்ற இடங்களுக்கும் செல்வதாகவும் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.