நாகார்ஜுனா பண்ணை வீட்டு ரகசியம்!! அழுகிய நிலையில் சடலம்.. பதறவைக்கும் தகவல்கள்..
தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் நாகார்ஜுனா. இவர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது இவர் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நாகார்ஜுனாவின் பண்ணை வீட்டு தொடர்பாக சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, தெலங்கானாவில் பாப்பிரெட்டிப்பட்டியில் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான 40 ஏக்கர் பண்ணை இருக்கிறது. அந்த பண்ணை வீடு மற்றும் நிலம் பயன்படுத்தப்படாமலேயே இருந்து இருக்கிறது.
கடந்த 2019 -ம் ஆண்டு இந்த பண்ணை வீட்டில் அடையாளம் தெரியாத அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விவசாயத் தொழிலாளி மின்சாரம் தாக்கி இருந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.