சமந்தா மற்றும் குடும்பத்தை இழிவுப்படுத்திய அமைச்சர்!! மாஜி மாமனார் நாகர்ஜுனா செய்த செயல்
சமந்தா - நாக சைதன்யா
ஆந்திராவில் எப்படி திருப்பதி லட்டு பிரச்சனை பெரியளவில் பேசப்பட்டதோ? அதேபோல் தெலுங்கானாவில் தற்போது அமைச்சர் கொண்டா சுரேகா, சமந்தா - நாக சைதன்யா விவாகரத்திற்கு காரணம் கே.டி.ஆர் தான் காரணம்.
கொண்டா சுரேகா
மாதாப்பூர் அருகே ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அரங்கம் அண்மையில் இடிக்கப்பட்டது.
முந்தைய ஆட்சியின்போது அந்த கட்டடத்தை இடிக்காமல் இருக்க, சமந்தாவை தமது ஆசைக்கு இணங்க வைக்க வேண்டும் என அப்போது அமைச்சராக இருந்த கே.டி.ராமாராவ் கூறியதாகவும்.
அதற்கு நாக சைதன்யாவின் குடும்பமே சமந்தாவிடம் அதனை வலியுறுத்தியதாகவும் அமைச்சர் கொண்டா சுரேகா என்று கூறியது பெரியளவில் வெடித்து வருகிறது. அமைச்சர் இப்படி சமந்தாவை இழிவுப்படுத்தி பேசியதை, நாகர்ஜுனா முதல் ஆளாக கண்டித்து கருத்தினை போட்டார்.
அவரை தொடர்ந்து சமந்தா, நாக சைதன்யா, அமலா, நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளீட்ட பலரும் அமைச்சருக்கு எதிராக கண்டித்தபடி கருத்துக்களை தெரிவித்தனர். அதன்பின் தான் வாய்த்தவறி பேசிவிட்டதாக கூறி மன்னிப்பும் கேட்டிருக்கிறார் கொண்டா சுரேகா.
அவதூறு வழக்கு
இந்நிலையில், சமந்தாவின் மாஜி மாமனார் நாகர்ஜுனா, அமைச்சர் கொண்டா சுரேகா மீது அவதூறு வழக்கு போட்டுள்ளார். தன் குடும்ப உறுப்பினர்களின் கெளரவம் மற்றும் நற்பெயரை கெடுக்கும் வகையில் அவதூறான கருத்துக்களை கூறி நாம்பள்ளி நீதிமன்றத்தில் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் நாகர்ஜுனா. இதில் இருந்து தான் பின் வாங்கப்போவதில்லை என்றும் நாகர்ஜுனா காட்டமாக தெரிவித்துள்ளார்.