சமந்தாவை பிரிந்ததால் என் மகன் சந்தோஷமாக இருக்கிறான்.. நாக சைதன்யா தந்தை ஓப்பன்

Samantha Naga Chaitanya
By Edward Sep 17, 2022 03:30 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவின் பாணா காத்தாடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பின் இரு மொழிப்படங்களிலும் நடித்து வந்தார். கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமந்தாவை பிரிந்ததால் என் மகன் சந்தோஷமாக இருக்கிறான்.. நாக சைதன்யா தந்தை ஓப்பன் | Nagarjuna React On Naga Chaitanya Samantha Divorce

சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து

திருமணத்திற்கு பின் சில போல்ட்டான கதாபாத்திரத்தில் நடித்து அதில் சில சர்ச்சையில் சிக்கியதால் கணவர் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 4 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக கடந்த ஆண்டு விவாகரத்து செய்தியை வெளியிட்டார் சமந்தா.

அதன்பின் படங்களில் க்ளாமர் காட்டியும் புஷ்பா படத்தில் குத்தாட்டம் போட்டு தன் மார்க்கெட்டை உயர்த்தினார். இதனையடுத்து 5 கோடி அளவில் தன் சம்பளத்தை பெற்று வருகிறார்.

சமந்தாவை பிரிந்ததால் என் மகன் சந்தோஷமாக இருக்கிறான்.. நாக சைதன்யா தந்தை ஓப்பன் | Nagarjuna React On Naga Chaitanya Samantha Divorce

இதுதான் உண்மை

அதேபோல் விவாகரத்துக்கு பின் படங்களில் கவனம் செலுத்து வரும் நாக சைதன்யா நடிகையுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வதந்திகளும் பரவியது. இந்நிலையில், விவாகரத்துக்கு பின் தன் மகன் நாக சைதன்யா எப்படி இருக்கிறார் என்பதை பிரபல பாலிவுட் நாளிதழுக்கு பேட்டிக்கொடுத்து பகிர்ந்துள்ளார்.

நாக சைதன்யா - சமந்தா பிரிந்தது துரதிர்ஷ்டமான ஒரு விசயம். அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அது முடிந்து எங்களது வாழ்க்கையைவிட்டு விலகிவிட்டது.

இந்த விவாகரத்தின் போது அவர்களுடன் நாங்கள் இல்லை. ஆனால் தற்போது என் மகன் நாக சைதன்யா மகிழ்ச்சியோடு இருக்கிறார். என் சந்தோஷமே அவரது மகிழ்ச்சி தான் என்றும் அதுவே எனக்கு போதும் என்றும் கூறியிருக்கிறார்.