நக்மா, நடிகை ஜோதிகாவின் சொந்த அக்காவே கிடையாதா.. இவர் தான்!! பிரபலம் கூறிய ரகசியம்..
தென்னிந்திய சினிமாவில் அக்கா, தங்கையாக கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நக்மா மற்றும் நடிகை ஜோதிகா. இருவரும் இந்திய சினிமாவில் பல மொழிப்படங்களில் நடித்து 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்து வந்தவர்கள்.
ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்று வளர்ந்து தற்போது படங்களில் மீண்டும் நடித்து வருகிறார். ஆனால் நடிகை நக்மா பல பிரபலங்களுடன் காதலில் இருந்து பின் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன், ஜோதிகா - நக்மாவை பற்றி ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். சினிமா அரசியல் என்று வலம் வந்த நக்மாவிற்கு தற்போது 48 வயதாகிறது. அவரது சகோதரிகள் ஜோதிகா, ரோஷினி இருவரும் கல்யாணம் செய்து குழந்தை குட்டி என்று செட்டிலாகிவிட்டார்கள்.
பாட்டி வயதாகிவிட்ட நக்மாவிற்கு திருமணம் செய்யவேண்டும், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இப்போது வந்திருக்கிறது. 48 வயது கிழவியை திருமணம் செய்ய தொழிலபதிகர்கள் யாரும் முன்வர மாட்டார்கள். அனைவரும் நக்மா, ஜோதிகாவின் சொந்த அக்கா என்று கூறுகிறார்கள்.
ஆனால் ஜோதிகா - நக்மா இருவரும் உடன் பிறந்த சகோதரிகள் இல்லை. அவர் பெரியம்மாவின் மகள், ஜோதிகாவின் சொந்த சகோதரி ரோஷினி தான் என்றும் அவர் அருண் விஜய்யுடன் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார், திருமணமாகிவிட்டது என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.

