நம்மை மீறி யாராலயும் நம்ம மேல் கை வைக்க முடியாது.. நடிகை நளினி ஓப்பன் டாக்..
T Rajendar
Gossip Today
Actress
Hema Committee Report
By Edward
90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை நளினி 20க்கும் மேற்பட்ட படங்களில் கதநாயகியாக நடித்து பிரபலமானவர்.
தற்போது சீரியல்களிலும் ஒருசில படங்களிலும் நடித்து வரும் நளினி, ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பான சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
ஒரு பெண்ணை அவரது விருப்பத்தை மீறி யாராலும் தொட்டுவிட முடியாது. ஒருவர் நம்மிடம் பேசும்போதே அவர்கள் கண்களை வைத்து அவர்களது நோக்கமென்ன என்பதை நாம் தெரிந்து கொல்லலாம்.
இப்படித்தான் பல படங்களில் நடிப்பதை தவிர்த்து உள்ளதாகவும் நளினி தெரிவித்திருக்கிறார். ஆனால் தனக்கு பாலியல் தொந்தரவு போன்ற அனுபவங்கள் ஏற்பட்டதில்லை.
டி ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா படத்தில் நடித்தபோது அவரது மூச்சுக்காற்று கூட நடிகைகளின் மீது படாது. அவர் என்னுடைய வழிகாட்டி மற்றும் தெய்வம் போன்றவர் என்றும் நடிகை நளினி தெரிவித்துள்ளார்.