முதல்முறை கற்பமாகி கலைந்துவிட்டது.. கணவர் போட்ட கண்டீசன்!! நடிகை நமீதாவின் மறுபக்கம்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக 90களில் கொடிக்கட்டி பறந்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை நமீதா. கடந்த 2017ல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நமிதா, வீரேந்திரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின் 4 ஆண்டுகளுக்கு பின் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கற்ப காலத்தில் ஏற்பட்ட கஷ்டங்களை பற்றி பகிர்ந்துள்ளார்.
நான் சூரத்தில் பெற்றோர் வீட்டில் இருந்தபோது, பிரெக்னன்சி டெஸ்ட் எடுத்ததும் காலை என் அப்பாவிடம் நீங்க தாத்தா ஆகிட்டேன் என்றதும் யார்? என்று கேட்டார். நான் தான் என்று சொன்னேன். அதன்பின் கணவரிடம் சொன்ன இரு நாட்களில் இங்கே வந்துவிட்டார்.
மூணு மாசம் இரட்டை குழந்தைகள் என்று சொன்னார்கள். முழு நேரமும் படுக்கையில் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் இரட்டை குழந்தை என்பதால் உடல் எடை குறையக்கூடாது. அதனால் நடக்கக்கூடாது உடல் எடை கூடவேண்டும் என்று சொன்னார்கள். அதனால் மாடிக்கு ஒருமுறையும் கீழே ஒருமுறை போகணும் என்றும் பெட்டில் தான் இருக்கணும் என்று கணவர் கண்டீஷன் போட்டார்.
அந்த சமயத்தில் 7 மாதமாக வயிறு வெளியில் வரவில்லை. அதன்பின் தான் திடீரென வயிறு வெளியில் வந்தது, எனக்கு வலித்தது. பின் அவருக்கு கால் செய்து வயிறை பிடிக்க கூப்பிட்டேன்.
கல்யாணமாகி 2021ல் முதன்முறை கர்ப்பமாகினேன். 4 மாசத்தில் கர்ப்பம் கலைந்துவிட்டது. 2 மாதம் எனக்கு ஏதும் தெரியவில்லை, பின் தான் எனக்கு தெரிந்தது. அதனால் மன உளைச்சலில் இருந்தேன். அதன்பின் தான் கர்ப்பமாகி இரட்டை குழந்தை பிறந்தது என்று நமீதா தெரிவித்துள்ளார்.