அமெரிக்கா வரைக்கு கெட்டுப்போன விஜய்யின் பெயர்!! தேரை இழுத்து தெருவில் விட்ட நடிகர்..
தமிழ் சினிமாவில் முரட்டு வில்லனாக 80, 90காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் நெப்போலியன். கமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் வில்லனாக இருந்தும் கதாநாயகனாக முன்னணி இயக்குனர்கள் படங்களில் நடித்து வந்தார்.
ஜெயசுதா என்பவரை திருமணம் செய்த நெப்போலியன் தனூஷ், குணா என்ற இரு மகன்களை பெற்றெடுத்தார். முதல் மகன் தனூஷ் உடல் அளவில் சில பிரச்சனைகள் இருந்ததால் சிகிச்சைக்காக 12 வருடங்களுக்கு முன்பே அமெரிக்காவுக்கு சென்றார்.
அங்கு 6 வருடங்களுக்கு முன் மகன்களுக்காக புதிய வீட்டினை வாங்கி வாழ்ந்து வருகிறார். ஏற்கனவே விஜய் மீதுள்ள சில பிரச்சனைகளை பகிர்ந்து ஷாக் கொடுத்த நெபோலியன் சமீபத்தில் அளித்த வீடியோ கால் நேரலையில் விஜய்யுடன் இணைவது குறித்தும் அப்பா அம்மாவை குறித்தும் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நெப்போலியனிடம், 'நீங்களும் நடிகர் விஜய்யும் பிரச்சனைகளை மறந்து மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதா? என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த அவர், "எனக்கும் விஜய்க்கும் போக்கிரி படத்தில் சண்டை ஏற்பட்டது. அதன் பின்னர் 15 ஆண்டுகளாக நாங்கள் பேசிக்கொல்வத்தில்லை. நான் விஜய்யுடன் நடந்த பிரச்சனைகளை மறந்து மீணடும் இணைந்து நடிக்க தயார்.
அதற்கு அவரும் தயாராக இருப்பாரா?.
விஜய் தனது சொந்த அம்மா அப்பாவிடம் கூட பேசுவதில்லை. இந்த செய்தி அமெரிக்கா வரை வந்துள்ளது. இந்த தகவல் முற்றிலும் உண்மையா பொய்யா என்று எனக்கு தெரியவில்லை. முதலில் விஜய், அம்மா அப்பாவிடம் சமரசம் ஆகக்கட்டும் அதன்பின் அதை யோசிக்கலாம் என்று கூறி அசிங்கப்படுத்தியுள்ளார்.