திருமணத்திற்கு பின் இப்படி மாறிட்டாங்களே.. கோடிக்கணக்கில் சம்பளம் கேட்ட நயனை விளாசிய தயாரிப்பாளர்..
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட வெளியான படங்களுக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவனை ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு ஜவான் படத்தில் நடித்தும் வருகிறார். இதன்பின் நயன் தாராவின் 75 வது படத்திற்காக 10 கோடி அளவில் சம்பளமாக பேசப்பட்டதாக செய்திகள் வெளியாகி ஷாக் கொடுத்தது. பாலிவுட் பக்கம் சென்ற நயன்தாரா பாலிவுட் நடிகை தீபிகா, ஆலியா உள்ளிட்ட நடிகைகளுக்கு இணையாக சம்பளம் வாங்குவது இந்திய சினிமாவையே அதிர வைத்தாது. அப்படத்தில் 5 கோடி குறைத்துக்கொள்ள கேட்டுள்ளார் தயாரிப்பாளர்.
இதற்கு பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கடுமையாக நயன் தாராவை விளாசியுள்ளார். தீபிகா, ஆலியா உள்ளிட்ட நடிகைகள் தங்கள் படங்களின் பிரமோஷன் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் 10 கோடி சம்பளம் கேட்பது நியாயம்.
ஆனால் தான் தயாரிக்கும் படங்களுக்கு மட்டுமே பிரமோஷன் செய்ய முன்வரும் நயன் தாராவை எதற்காக படங்களில் கமிட் செய்கிறீர்கள் என்றும் அசிங்ப்படுத்தி பேசியுள்ளாராம். இதனால் கோலிவுட்டே படத்தின் தயாரிப்பாளருக்காக ஆதரவாக பேசி வருகிறார்களாம்.