தீபிகா படுகோனேவை போல பிகினியில் நயன்தாராவை ஆட வைத்தாரா அட்லீ!! உண்மை இதுதான்..
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பின் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து இரட்டை குழந்தையை பெற்றார்.
அதன்பின் ஜவான் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு மும்பையில் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் பதான் படத்தில் ஷாருக்கானுடன் எப்படி தீபிகா படுகோனே பிகினி ஆடையில் நடித்தாரோ அதேபோல் நயன் தாராவை இயக்குனர் அட்லீ நடிக்க வைக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
பதான் படத்தின் மிகப்பெரிய பிளஸ்-ஆக தீபிகாவின் கவர்ச்சியும் ஒரு பங்காற்றியதால் அட்லீ நயன் தாராவுக்கு கண்டீசன் போட்டதாகவும் செய்தி கசிந்தது.
ஆனால் இதுகுறித்து படக்குழுவினர், ஜவான் படத்தில் நயன் தாராவை பிகினியில் நடிக்க வைக்கும் பிளான் இருந்ததாகவும் ஆனால், அவருக்கு பிகினி ஆடை ஒரு பிரச்சனையாக இல்லை என்று கூறியுள்ளார். மேலும் தமிழில் பிகினியில் நயன் தாரா நடித்திருக்கிறார்.
தீபிகா பதானில் நடித்ததால், நயன்தாரா பதான் படத்தில் பிகினியில் நடிப்பார் என்பது யாரோ கிளப்பிட்ட வதந்தி என்றும் ஷாருக்கானுக்கு முன்னணி நடிகைகளுடன் நெருக்கமான காட்சியில் நடிக்கும் விரும்பம் இல்லை என்று கூறியுள்ளனர்.