விக்னேஷ் சிவனுக்காக இந்த வேலையெல்லாம் பார்த்தாரா நயன்தாரா
Nayanthara
Kaathuvaakula Rendu Kaadhal
By Tony
விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர். அப்படி சொல்வதை விட நயன்தாராவின் காதலர் என்றால் ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் தெரியும்.
இவருக்காக நயன்தாரா பல உதவிகளை செய்துள்ளார், இவர் பெரிய பட்ஜெட்டில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்தார்.
ஆனால், அந்த படம் ட்ராப் ஆக, விக்னேஷ் சிவன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இதை அறிந்த நயன்தாரா உடனே சரி அடுத்த வேலையை ஆரம்பி என ஊக்கப்படுத்த, உடனே காத்துவாக்குல இரண்டு காதல் கதையை எழுதியுள்ளார்.
இதிலும் சமந்தா கதாபாத்திரத்தில் முதலில் திரிஷாவை நடிக்க வைக்க முயற்சி செய்ய, அவர் நடிக்க மறுத்துள்ளார்.
இதனால், இந்த படம் அடுத்தக்கட்டத்திற்கு செல்லுமா என்ற நிலையில், சமந்தாவிடம் தன் காதலனுக்காக பேசி படத்தை ஓகே செய்ய வைத்ததே நயன்தாரா தானாம்.