கோடியில் பேரம் பேசியும் அவமானப்படுத்திய நயன்தாரா.. அலரவிட்ட அண்ணாச்சி?
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்-ன் நிறுவனராக பல கிளைகளை வைத்து தொழிலதிபராக இருப்பவர் லெஜண்ட் சரவணா. தன் கடைக்கு தானே நடித்தும் சினிமா நடிகைகளை நடிக்க வைத்தும் விளம்பரம் செய்து வந்த லெஜண்ட் சரவணா இரட்டை சகோதரர்களான ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் தி லெஜண்ட் படத்தில் நடித்திருந்தார்.
படம் சமீபத்தில் 2000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல எதிர் விமர்சனம் வந்தாலும் துளிக்கூட கவலைப்படாமல் படத்தின் பிரஸ்மீட்டையும் வைத்திருக்கிறார் சரவணன்.
இந்நிலையில் கதாநாயகிகளாக ஊர்வசி ரவுத்டேலா, கீதிகா திவாரி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் உருவாகுவதற்கு முன் நடிகை நயன் தாராவை நடிக்க கோடியில் பேரம் பேசப்பட்டதால். எத்தனை கோடி கொடுத்தாலும் உங்கள் படத்தில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன்.
தனக்கென ஒரு மார்க்கெட் இருக்கிறது என்று வேண்டாம் என்று கூறி லெஜண்ட் சரவணாவை அவமானப்படுத்தி இருக்கிறார் நயன்தாரா. இதற்கு பதிலடி கொடுக்கத்தான் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்டேலா, மாடல் அழகி கீதிகா திவாரியை கோடி சம்பளத்திற்கு புக் செய்து நடிக்க வைத்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா பாலிவுட் சென்று 10 கோடி அளவில் தான் சம்பளமாக பெற்றுள்ளார். ஆனால் இப்படத்திற்காக ஊர்வசி 20 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்ற செய்தி வெளியாகி வைரலானது. ஆனால் தனக்கு 10 கோடிக்கு கீழ் தான் சம்பளம் கொடுத்தார்கள் என்று ஊர்வசி ரவுத்டேலா கூறியுள்ளாராம்.