குழந்தையை மட்டும் அப்படி பெற்றுக்கொள்ளலாமே! விக்னேஷுக்கு ஷாக் கொடுக்கும் நயன்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா கையில் தமிழ், பாலுவுட் என பல படங்களில் நடித்து காதல் விக்னேஷிவனுடன் பல படங்களை தயாரித்தும் வருகிறார்.
படங்களில் மட்டுமே அதிக கவனம செலுத்தி வரும் நயன் கல்யாணத்தை ஒரு துட்சமாக கருத்தி விக்னேஷ் சிவனை காத்திருக்க வைத்து வருகிறார். அவரும் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன் அடுத்த படக்கதையில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.
சமீபத்தில் கூட இருபரும் இணைந்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர் என்று கோவிலில் எடுத்த புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நயன்தாரா கூடிய விரைவில் வாடகை தாய் மூலமாக ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அவருக்கு முப்பத்தி ஏழு வயசு ஆயிடுச்சு. இனிமேல் குழந்தை பெற்றுக் கொள்வதில் சில சிரமங்களும் இருக்கிறது. அதனால்தான் அவர் வேறு வழியில்லாமல் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
திருமணத்திற்குப் பிறகு குழந்தைக்காக ஒரு வருடம் நடிப்பதை விட வேண்டும் அல்லது குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருக்க வேண்டும். இதிலிருந்து தப்பிக்க அவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளாராம்.
திருமணத்தை பற்றியே வெளியில் சொல்லாமல் தள்ளிப்போட்டு வரும் நயன் தாரா இதுக்கு மட்டும் ஓப்பனாக பதில் கூறுவாரா என்ன?. எல்லாம் காலப்போக்கில் தெரியவரும் என்று ரசிகர்கள் கூறி புலம்பி வருகிறார்கள்.