பிரபுதேவாவுக்கு கோடியில் அள்ளிக்கொடுத்த நயன் தாரா.. காதலுக்காக எதற்கு துணிந்த லேடி சூப்பர் ஸ்டார்..
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக இரண்டாம் படத்திலேயே நடித்து பிரபலமானார்.
சிம்புவுடன் காதல்
இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த நயன் தாரா நடிகர் சிம்புவுடன் ஜோடிப்போட்டு நடித்த போது அவருடன் காதலில் இருந்தார். சில ஆண்டுகளுக்கு பின் கருத்து வேறுபாடு காரணமாக சிம்பு - நயன் தாரா பிரிந்தனர். இயக்குனர் பிரபுதேவாவுடன் காதலில் இருந்து வந்தார். திருமணம் செய்யப்போகும் நிலை வரை நயன் தாரா சென்றார். முதல் மனைவி பிரச்சனை கொடுத்ததால் அதிலிருந்து விலகி பிரபுதேவாவையும் கழிட்டி விட்டார்.
நயன்தாரா குணம்
நயன் தாரா பழகுபவர்களிடம் அன்பை கொட்டித்தீர்க்கும் குணம் கொண்டவர். அப்படி பிரபுதேவா மீது அதீத காதலால் கையில் அவர் பெயரை டேட்டூ போடும் அளவிற்கு காதலை கொட்டித்தீர்த்தார். காதல் மட்டுமில்லாமல் பிரபுதேவா கடன் பிரச்சனையில் இருக்கும் போது தீர்த்து வைத்திருக்கிறார் நயன் தாரா.
அவருக்கு பிடித்துவிட்டால் அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் நயன் தாரா செய்யக்கூடியவர் என்பது அவர் செயலை பார்த்து தெரிந்து கொண்டவர்கள் பலர். அப்படி பிரபுதேவாவை பிரிந்து விக்னேஷ் சிவனை சமீபத்தில் திருமணம் செய்து வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றிருக்கிறார் நயன்.
தற்போது 38 வயதாகி சினிமாவில் இன்னும் லேடி சூப்பர் ஸ்டார் இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.