ஒரு வழியா ஹனிமூனை முடித்த நயன்தாரா.. விக்னேஷ் சிவனின் அடுத்த பிளானே அதுதான்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, ஷாருக்கானின் ஜவான் படத்தில் பிஸியாக நடித்து வந்தார். இடையில் 7 வருடங்களாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை ஜூன் 9 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டார்.
சொத்துக்கள் குவிப்பு
திருமணத்திற்கு முன் போயஸ் கார்ட்னரில் 20 கோடிக்கும் மேல் மதிப்புள்ள 2 பிளாட்டினை வாங்கினார். இதன்பின் விக்னேஷ் சிவனுக்கு கார், பல கோடியில் சொத்து, அவருக்கான நகை ஆபரணங்கள் என சொத்துக்களை வாங்கி குவித்து வருகிறார் நயன் தாரா.
தற்போது ஸ்பெயின், துபாய் ஹனிமூனை முடித்து தற்போது இந்தியா பக்கம் திரும்பி இருக்கிறார்கள் காதல் தம்பதியினர். ஒரு படத்திற்காக நயன் 10 கோடி அளவில் சம்பளம் வாங்கி 20 வருட சினிமா வாழ்க்கையில் சுமார் 150 கோடிக்கும் மேல் சொத்தினை பெருக்கி வருகிறார்.
ஹைதராபாத் பங்களா
இந்நிலையில் ஹதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இரு பங்களாக்களை நயன் தாரா ஜோடி வாங்கியுள்ளார்களாம். சுமார் 15 கோடி மதிப்புள்ள இந்த பங்களாவை தவிர வியாபாரத்திலும் முதலீடு செய்து வருங்காலத்திற்காக சேர்த்து வைத்துள்ளார்.
இதற்கு முழு காரணம் நயன் தாரா கூடிய சீக்கிரமே சினிமாவில் இருந்து விலகுவதாக முடிவெடுத்தது தான் என்று கூறி வருகிறார்கள். இதன்பின் நயன் தாரா ஜவான் படத்திலும் விக்னேஷ் சிவன் ஏகே62 படத்திற்காக முழுவீச்சில் பணியாற்ற இருக்கிறார்களாம்.