கோவிலுக்கு சென்ற இடத்தில் நயன் தாராவிடம் ரசிகை செய்த செயல்? ஷாக்கான கணவர் விக்னேஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி இருந்த நிலையில் ஆசையாய் 7 வருடமாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கரம்பிடித்தார்.
எப்போது திருமணம் என்ற கேள்விக்கு 7 ஆண்டுகால காதலுக்கு ஒரு முடிவு கட்டியுள்ளார் நயன். திருமணம் முடிந்தது, சில நாட்களிலேயே ஹனிமூனுக்காக பேங்காக் சென்று உலா வந்தனர். அங்கு எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு நயன் தாரா அம்மாவை சந்தித்து ஆசி வாங்கிய தம்பதியினர் கேரளாவில் உள்ள கோவில்களுக்கு சென்று ஆசிர் பெற்று வந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த ரசிகைகளுடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார் நயன் தாரா.
அப்போது ஒரு ரசிகை நயன் தாரா காலில் விழுந்துள்ளார். இதனால் நயன் - விக்கி ஷாக்காகினர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
