25 கோடிக்கு ஆப்பு வைத்துவிட்டு வாய்த்திறக்காத விக்னேஷ்! நீயா இப்படி? மெசேஜ் அனுப்பிய நயன்தாரா..
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. 7 ஆண்டுகளுக்கு பிறகு தான் உருகி உருகி காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கரம் பிடித்தார்.
கடந்த ஆண்டு பிளான் போடப்பட்டு அது தள்ளிப்போய் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் பிரம்மாண்ட முறையில் தாலி கட்டியுள்ளார் விக்னேஷ் சிவன். திருமணத்தின் வீடியோ கவரேஜை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் 25 கோடிக்கு விற்று காசு பார்க்க திட்டம் போட்டிருந்தார் நயன் தாரா. ஆனால் விக்னேஷ் சிவன் திருமணத்தன்றே முக்கிய புகைப்படங்களை வெளியிட்டு விட்டார்.
இதனால் இனிமேல் வெளியாகும் புகைப்படங்கள் வீடியோக்கோ மதிப்பு இருக்காது என்று விக்னேஷ் சிவன் நயன் தாரா போட்ட ஒப்பந்தத்தில் இருந்து நெட்பிளிக்ஸ் விலகியதாக கூறப்பட்டது. இதனால் 25 கோடி போச்சே என்று நயன் தாரா, விக்னேஷ் மீது கோபத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
இதன்பின் நெட்பிளிக்ஸ் சில ப்ரீ வெட்டிங் புகைப்படங்களை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது. நயன் தாரா விக்னேஷ் சிவன் தங்கள் காதல் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ளும் வீடியோவும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கூடிய சீக்கிரமே வெளியாகவுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
Cue the malems cos we're ready to dance in excitement💃
— Netflix India South (@Netflix_INSouth) August 9, 2022
Nayanthara: Beyond the Fairytale is coming soon to Netflix! pic.twitter.com/JeupZBy9eG
இந்த பிரச்சனை அடங்காத நிலையில் விக்னேஷ் சிவன், நடிகை சமந்தாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும் அடுத்து இயக்கும் ஏகே62 படத்தில் கதாநாயகியாக நயன் தாராவை விட்டுவிட்டு சமந்தா பெயரை சிபாரிசு செய்ததாகவும் கூறப்பட்டது. இதன் பெயரால் கூட நயன் தாரா விக்னேஷ் சிவன் மீது சண்டையிட்டு வந்ததும் செய்திகள் வெளியானது.
தற்போது விக்னேஷ் சிவன் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியினை ஒருங்கிணைத்து இயக்கும் பொறுப்பில் இருந்து வருகிறார். தற்போது போட்டி முடிவுக்கு வரும் நிலையில் இருக்கிறது. சிறப்பாக செயல்பட்டதற்கு முதல்வர் முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள், நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
தற்போது நடிகை நயன் தாராவும் தன் கணவர் விக்னேஷ் சிவனின் இந்த செயலை பாராட்டி வாவ்..செம Grand, Extraordinary Wikky கலக்கிட்டனு கூறி மெசேஜ் செய்தும் கால் செய்து பேசியும் இருந்ததாக விக்னேஷ் சிவன் பேட்டியில் தெரிவித்துள்ளார். எவ்வளவு தான் கோபம் இருந்தாலும் கணவரை பாராட்டுவது கடமை தானே என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.