யார்கிட்டயும் விசாரிக்கவில்லை.. 30 செகண்ட் கூட பேசவில்லை!! இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கொடுத்த விளக்கம்..
நெல்சன் திலீப்குமார் கொடுத்த விளக்கம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சார்பாக பலர் கைது செய்யப்படு விசாரணை செய்து வரும் நிலையில் பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் மனைவி மோனிஷா இந்த வழக்கில் தொடர்புடையவர் என்று விசாரணை செய்யவுள்ளனர் என்று கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து தலைமறைவான ரவுடிக்கு மோனிஷா அடைக்கலம் கொடுத்துள்ளார் என்று போலிசார் விசாரணை நடத்தியதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் நெல்சன் தன்னிடம் போலிசார் இது போன்று விசாரணை நடத்தவில்லை என்றும் எந்த போலிசும் சம்மன் கொடுத்தது கிடையாது. என் வாழ்நாளில் எந்த போலிசரிடம் இருந்து தொலைப்பேசியில் கூட பேசியது கிடையாது.
எனக்கு காவல்துறைக்கும் மிக நீண்டதூரம் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். என் மனைவியிடம் விசாரிக்கப்பட்ட விவகாரம் குறித்து பேசிய நெல்சன், அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை, யாரும் விசாரணை நடத்தவில்லை என்று நெல்சன் திலீப்குமார் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி மட்டும் யாரோ கால் செய்தார்கள் 30 செக்ண்ட் கூட பேசவில்லை. எதற்கு என்னை இதில் இழுக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.